சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதும் சகோதரருமான அனுர பண்டாரநாயக்க இன்று காலாமானார். [மேலும்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. [மேலும்]
திபெத்தில் நடைபெற்றுவரும் அரசியல் மோதல்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சீன எதிர்ப்பு விவகாரம் திபெத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. இதுகுறித்து விரிவான அறிக்கை இரண்டொரு நாளில் அரசு தாக்கல் செய்யும் என்று அவர் கூறினார்.
வடமாநிலங்களில் அடுத்த வாரம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையின் போது நாசவேலையில் ஈடுபடப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பழைய டெல்லி ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் அல்கொய்தா தீவிர வாதிகள் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. இதுவரை 418 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்துள்ளது இங்கிலாந்து. காலிங்வுட் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்யவில்லை.
இந்திய கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆடு பலி கொடுத்தது தொடர்பாக இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என மிருக வதை எதிர்ப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக அசத்தி வருகிறார் தோனி. "டுவென்டி20' உலக கோப்பையை வென்று காட்டிய இவர், ஆஸ்திரேலிய மண்ணிலும் கலக்கினார்.